search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கொலை"

    • பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    ஒசூர் அருகே உள்ள தளியில் ஜெயந்தி காலனி அருகே பிரபல ரடிவுயான தளி சதீஷ் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்ற விவரம் குறித்து விசாரித்தனர்.

    இதில் தளி அருகே குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (வயது34) என்பவர் தெரியவந்தது.

    பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    வீட்டில் இருந்த சதீஷை நேற்று இரவு சில மர்ம நபர்கள் மதுகுடிப்பதற்காக ஜெயந்தி காலனியில் உள்ள எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

    பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இதில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வாங்கி கொண்டு அவர் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சதீஷின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன சதீஷ் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சிக்கியுள்ள சதீஷை யாராவது பழிவாங்குதற்காக வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் என்பது தெரியவந்தது.
    • மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் 50 என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மேலகொண்டையம் பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்கோவிலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் மற்றும் மணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை.
    • சுற்றி வளைத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சுட்டுக்கொலை.

    காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இருவரும் ரெயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலயில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

    உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

    ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

    • கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை,எருக்கஞ்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (வயது 52) ரவுடி. இவர் வடபெரும்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வட பெரும்பாக்கத்தில் இருந்து மாதவரம் சின்ன ரவுண்டானா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    செங்குன்றம் அருகே வந்தபோது மழை பெய்தது. இதையடுத்து செழியன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரம் ஒதுங்கி நின்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் செழியனை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, கையில் பலத்த காயம் அடைந்த செழியன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய செழியனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செழியன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ராஜாராபர்ட் , இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை செழியன் கொலை தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தந்தை கொலைக்கு பழிதீர்க்க 22 ஆண்டுகள் காத்திருந்து சதீஷ்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து செழியனை தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.

    கடந்த 2001- ஆண்டு ரவுடியாக வலம் வந்த செழியன் எருக்கஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கொலை செய்தார். இந்த கொலையில் கைதான செழியன் பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் பிரபாகரனின் தம்பியான பாபு என்பவரையும் வெட்டிக் கொன்றார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர் செழியன் பின்னர் குற்றச் செயலில் ஈடுபடாமல் வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்து உள்ளார்.

    இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட பிரபாகரனின் மகனான சதீஷ்குமார் எப்படியாவது தந்தை கொலைக்கு பழிதீர்க்க செழியனை தீர்த்துகட்ட திட்டமிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து செழியன் வந்ததை நோட்ட மிட்ட சதீஷ்குமார் மழைக்கு அவர் ஒதுங்கி நின்றபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு உதவியவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    சோழவரத்தை சேர்ந்தவர் விக்கி (வயது32). ரவுடி. இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் ஆவடியை அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பில் தலையில் கல்லைப்போட்டு விக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகம் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் ஆவடி துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அன்பழகன், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தின் அருகே கேக் வெட்டப்பட்டு சிதறி கிடந்தது. மேலும் மதுபாட்டில்களும் கிடந்தன.

    எனவே இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடி விக்கியுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நேற்று இரவு விக்கி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள உறவினர் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை 1996-ம் ஆண்டு ஒரு கும்பல் ஜெயிலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது. அவரது தலையை மீனாட்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் வைத்துவிட்டுஅந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முன் விரோதத்தில் லிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது செல்வம் தலைமறைவானார். கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் செல்வம் சென்னையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு செல்வத்தை கைது செய்த போலீசார், இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வடசேரி போலீஸ் நிலையத்தில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு செல்வத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த சில நாட்களாக தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    திருமங்கலம்:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனியாக தொழில் தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு கிருஷ்ணகுமார் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை திருநகரை அடுத்த கூத்தியார்குண்டு-கருவே லம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

    இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது கிருஷ்ணகுமாரை, மாரிராஜ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
    • கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டா மணிகண்டன் (வயது 30), பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (32). இவர் மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.

    அதற்கு அவர் கார் இப்போது தான் வாங்கியிருக்கிறேன், நானே ஓட்டி கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதனால் வேறு ஒரு காரில் மேட்டூர் சென்ற மகாவிஷ்ணு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது ரவுடி கிட்டா மணிகண்டன் என்னிடம் காரை கேட்டு விட்டு எதுவுமே சொல்லாமல் போய் விட்டாயே வண்டிக்கு டீசலை போட்டு கொண்டு காத்திருக்கிறேன் என கூறினார்.

    முன்னதாக மகாவிஷ்ணுவின் அக்காவிடமும் இவ்வாறு கேட்டு அவர் தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு அங்கிருந்த இரும்பு ராடால் ரவுடி கிட்டா மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்ற மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி கிட்டா மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    • மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது
    • கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த ஆதனூர், டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). ரவுடி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மோகன்ராஜ் கொடூராமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது.

    எனவே மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மட்டும் தனியாக இருந்ததால் கொலை நடந்தது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பின்னரே வெளியில் தெரிந்நது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட மோகன் ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. அவரது தந்தை பம்மலில் வசித்து வருகிறார். தாய் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் எதிரிகள் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்ததும் மோகன்ராஜ் டி.டி.சி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து உள்ளார்.

    இதனை அறிந்த எதிர்தரப்பினர் வீடுபுகுந்து மோகன்ராஜை வெட்டி கொலை செய்து விட்டனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    புழல், அடுத்த காவாங்கரை, 15-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சத்யா(வயது22). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது.

    நேற்று இரவு அவர் சென்னை எழும்பூருக்கு வந்திருந்தார். பின்னர் நண்பர்களுடன் பாண்டியத் ரோட்டில் உள்ள ஜூஸ் மற்றும் டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 5 பேர் கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யாவை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார்கள் . இதில் கழுத்து, வாய், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்யா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார்.

    கொலையாளிகள் ரவுடி சத்யாவை வெட்டி கொலை செய்வதை கண்டு அவ்வழியே சென்று பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக அவர்கள் சத்யாவை கொலை செய்தனர்? என்பது பற்றி எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மாதவரம் பகுதியை சேர்ந்த நாய் ரமேஷ் என்பவர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின்பிரிட்ஜ் அருகே நாய் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலையுண்ட சத்யா குற்றவாளியாக இருந்தார். இந்த மோதலின் தொடர்ச்சியாக சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான எழும்பூர் பாந்தியன் சாலையில் வைத்து ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சென்னை மாநகரில் வெளியூர்களில் இருந்து வந்து ஒதுங்கி இருக்கும் ரவுடிகளைகளை ஒடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் தங்களது பகுதியில் பதுங்கியுள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை.
    • தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).

    பிரபல ரவுடி. இவர் மீது அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி அர்ஜு ன்ராஜ் என்பவருடன் அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை எடுத்து மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆனால் இதை சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார்.

    பின்னர் அவரை வெளியில் வர வைப்பதற்காக பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

    அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள் வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர். இதில் ஓடுகள் உடைந்து விழுந்தது.

    அதைத்தொடர்ந்து சுதாகர் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

    அடுத்த நொடி தயாராக நின்ற பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடினர்.

    பின்னர் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அர்ஜுன்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசனின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த ஜெகதீசனின் சகோதரர் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்து ரவுடியை கண்டித்தார். அவர்களுக்குள் பல முறை சண்டையும் நடந்தது. இருந்தபோதிலும் சுதாகர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் நானும் அவரும் சென்று வீட்டுக்குள் இருந்த ரவுடியை வெளியே வர வைத்து வெட்டிக்கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.

    தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
    • ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

    இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×